உமையவள் பாமாலை | போற்றி! போற்றி! | மூவர்க்கும் தேவர்க்கும் பாடல் (Moovarkum Devarkum)
போற்றி! போற்றி!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி, முக்கண்ணி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி
நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்(து) இனிக்கின்ற
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி
பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி
ஏவல் கொண்டுலகு பல காவல்செய், அன்னைநின்
இணையடிகள் போற்றி, போற்றி
இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி
ஏவல் கொண்டுலகு பல காவல்செய், அன்னைநின்
இணையடிகள் போற்றி, போற்றி
இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
-----------***********------------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment