உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)
நீ தந்த குங்குமம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையோடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையோடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை
முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை
உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
இற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
--------********---------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment