Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)

                          தத்துவ  விநாயகர் 

                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

                        காப்பு 

அண்டங்கள் ஏழினோ டேழும், அப்  பாலுமாய் 
        ஆனஎம் ஞானதேவா ! 
அறுகுடன் தும்பையும், ஆத்தியும் , கொன்றையும்,
      அணிசெய்யும் அழகுமார்பா !     

எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின்அச்(சு)
        இற்றிடச் செய்தவீரா !
 இலகுபுகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம் 
       எழுதிடும் கவிதைநேசா !

தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
      சந்தநடை கொள்ளும்பாதா ! 
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே 
      தண்ணளி புரிந்தஈசா !

தெண்டிரை சூழுலகில் தேவிரா ஜேஸ்வரியின் 
      தெய்வமாக் கருணைபாடச் 
சித்தமிசை குடிகொண்ட தத்துவ விநாயகா 
       திருவருள் தத்துநீகா ! 

             நூல் 

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)