உமையவள் பாமாலை | அருளை வேண்டினேன் | தேறாத கவியெனிலும் பாடல் (Thaeratha Kavienilum)
அருளை வேண்டினேன்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
தேறாத கவியெனிலும் மாறாத காதலால்
திருமுன்பு சாற்றுகின்றேன் !
சிந்தைஅணு ஒவ்வொன்றும் தேவிஉன தேகச்
செய்யதமிழ் பாடுகின்றேன்
திருமுன்பு சாற்றுகின்றேன் !
சிந்தைஅணு ஒவ்வொன்றும் தேவிஉன தேகச்
செய்யதமிழ் பாடுகின்றேன்
ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
ஆரைநான் நொந்துகொள்வேன் ?
அறியாது பிழைசெய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்குசொல்வேன் ?
நீறாக வேநிருதர் புரமூன்றும் செற்றஉனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன் !
நெற்றிவிழி யால்எனது குற்றமலை பொடியாக
நின்னருளை வேண்டுகின்றேன் !
ஈறேதும் இல்லாத இன்பவடி வாக,என்
இதயதள மீதும்ஒளிர்வாய் !
இறைவி,எனை ஆண்டருளும் இராஜரா ஜேச்வரி,
இமயமலை வாழும்உமையே !
-------*******-------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment