Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

                                    வரம் 

தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்
        தீராத நோய்கள் தீரும்
செல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்
        சீர்நிலை பேறும் சேரும்

பூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு
        புதிய ஒளிதான் பிறக்கும்
பூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்
        பொலிவு வரும் உயிர் தழைக்கும்

பாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்
        பனிபோல் அகன்றுநீங்கும்
பத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்
        பாரின் மிசை அமைதி ஓங்கும்

யாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என
        இசைபாடி வாழ்த்து கின்றோம்
இறைவினை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
        இமயமலை வாழும் உமையே.
        
                                    -------*********-------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)